ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மொனராகலை மாவட்ட மாநாடு நேற்று ( 13) புத்தல பொதுச் சந்தை மைதானத்தில் பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மொனராகலை மாவட்ட மாநாடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மொனராகலை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜகத் புஸ்பகுமார, மொனராகலை அமைப்பாளர் வசந்த ஜயவர்தன, பிபிலைத் தொகுதி அமைப்பாளர் உதார சொய்சா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் தொழில் அமைச்சருமான நிமல் நிறிபால டி சில்வா . , மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பொருளாளர் லசந்த அழகியவன்ன, விளம்பரச் செயலாளர் சாந்த பண்டார, மொனராகலை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment