பொலிஸ் துறையை அரசியல் மயமாக்க இடமளிக்கப்போவதில்லை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர



அஸ்ஹர் இப்றாஹிம்-
புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள 105 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளோடு அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், சிறந்த பொலிஸ் அதிகாரிகள் மத்தியில் ஆராய்ந்து சிறந்த அதிகாரிகளைத் தெரிவு செய்தே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
அதற்காக தனியான குழு ஒன்று நியமிக்கப்பட்டு பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் பரிந்துரைக்கிணங்கவே அவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
பொலிஸ் துறையை அரசியல் மயமாக்க ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தாம் பணிபுரியும் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்களுக்கான நலன்புரி சேவைகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :