தைப்பொங்கலுக்கான புத்தரிசி ,பானை முதலான பொருட்கள் இலவசமாக வழங்கி வைப்பு



காரைதீவு குறூப் நிருபர் சகா-
மிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்த ஒரு தொகுதி மக்களுக்கு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி தொடக்கம் சட்டி பானை வரை இலவசமாக வழங்கப்பட்டது.
தைத்திருநாளுக்கான தமிழர்களுடைய கலை கலாச்சாரம் பாரம்பரியங்களை மெருகூட்டும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டது.
கனடாவைச் சேர்ந்த கிருஷேந்திரா பேரின்பமூர்த்தி அவர்களுடைய 13 ம் ஆண்டு நினைவை முன்னிட்டு தமிழுக்கும் சைவத்திற்கும் தமது குடும்பத்தினால் இந்த உதவி வழங்கப்படுகின்றது.
இதனை காரைதீவு பிரதேச சபைத் தவிசாளரும் ,சமூக சேவையாளருமான கிருஷ்ண பிள்ளை ஜெயசிறில் வழங்கி வருகிறார்.

அம்பாறை மாவட்டத்தில் மிகவும் வறுமையில் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு தங்களுடைய குடும்ப நினைவு தினத்தையும் பொங்கலையும் சிறப்பிக்கும் முகமாகவும் 100 குடும்பங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் பரவலாக இந்த அரிசி பானை பொங்கலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர்களுடைய குடும்பம் சார் உறவுகள் வழங்கி இருக்கின்றார்கள்.

அம்பாறை மாவட்ட மக்கள் சார்பாக அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதோடு இந்த வழங்கல் என்பது திருக்கோவில் பிரதேசத்திற்கு உட்பட்ட கஞ்சிகுடியாறு , தம்பிலுவில் , விநாயக புரம் , தம்பட்டை பரவலாக வழங்கப்பட்டது குறிப்பிட தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :