நிந்தவூர் அட்டப்பள்ளம் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபகரமாக உயிரிழப்பு !



நூருல் ஹுதா உமர்-
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை 16 பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

நிந்தவூர் 10 அட்டப்பள்ளம் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவன் தனது குடும்பத்தாருடன் அன்று பிற்பகல் பொழுதுபோக்கிற்காக அட்டப்பள்ளம் கடற்கரை பிரதேசத்திற்கு சென்றுள்ளார். இதன் போது கடற்கரைப் பிரதேசத்தில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

உயிரிழந்த சிறுவன் நிந்தவூர் 10 ம் பிரிவு அட்டப்பள்ளம் சமாதான கிராமத்தில் வசித்து வரும் ஆர் இன்ஸான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :