சவுதிஅரேபியாவின் உதவியில் அமைக்கப்பட்ட பிபிலை செங்கலடி வீதிதிறந்துவைக்கப்பட்டது.







ஏறாவூர் சாதிக் அகமட்-
வூதி அரேபிய நிதி உதவியின் கீழ் 7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பேராதனை - பதுளை - செங்கலடி (A005) வீதி 275 கிலோமீற்றர் நீளமான பிபில முதல் செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் நீளமான வீதி பொதுமக்களின் பாவனைக்கு திறந்து வைக்கும்

இந்நிகழ்வில் வீதிகள்,நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் அரசாங்க பிரதம கொறோடா கௌரவ அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களும்

சவூதி அபிவிருத்திக்கான நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல்மர்ஷாத் அவர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தை பாராளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் சதாசிவம்வியாழேந்திரன் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல் அவர்களும்,ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.நழீம், மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சர்வானந்தா அவர்கலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.மேலும் இந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் முக்கியஸ்த்தகர்கள்,மதகுருமார்கள்,பொதுமக்கள் போன்ற பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :