ஏ.எல்.எம்.அஸ்மியை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு ஓட்டமாவடியில்



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மி கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவுத்துறையை முன்னேற்றும் நோக்கில் மேற்கொண்டுவரும் நடவடிக்கையை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு ஓட்டமாவடியில் இடம் பெற்றது.
ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் பாலர் பாடசாலை 38வது மாணவர் வெளியேற்று விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஆணையாளரை இயக்குனர் சபை உறுப்பினர்கள் கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
தலைவர் எம்.எம்.எம்.ஜெஸ்லின் தலைமையில் கூட்டுறவு சங்க கோப் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் சட்டத்தரணி எம்.எம்.எம்.ராஸிக், கூட்டுறவு திணைக்களத்தின் மட்டக்களப்பு தலைமைக்காரியாலய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்
எம்.ஐ.எம்.உசனார், ஓட்டமாவடி கூட்டுறவு சங்க கூட்டுறவு அபிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம். அஹமட் ஹாதி, கூட்டுறவு அபிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.எம்.பாறூக், கே.மங்களன், என்.ரீ.எம்.ஜாக்கீர் மற்றும் கூட்டுறவுச்சங்க இயக்குனர் சபை உறுப்பினர்கள் பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மியின் சேவையை பாராட்டி கூட்டுறவுச்சங்க தலைவர் இயக்குனர் சபை உறுப்பினர்கள் மற்றும் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :