பெண்களுக் கெதிரான வன்முறையினை விழிப்பூட்டும் "இல்லத்து வழக்காடு" நூல் வெளியிடப்பட்டது !



நூருல் ஹுதா உமர்-
சிய நிலையத்தின் அனுசரணையுடன் GAFSO நிறுவனத்தால் அமுல்படுத்தப்படும் பெண்களுக் கெதிரான வன்முறையினை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டத்தின்கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு அங்கமாக "இல்லத்து வழக்காடு" எனும் தலைப்பில் வெளியீட்டாளரும், திட்டபணிப்பாளருமான ஏ.ஜெ. காமில் இம்டாட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தக வெளியீடு காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றது .

இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியீட்டு வைத்தார். மேலும் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ் பாத்தீபன், கணக்காளர் ஜயசர்மிகா, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேக்கா எதிரிசிங்க, காரைதீவு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிட்டா உட்பட மாதர் அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் .

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :