மட்டக்களப்பு மாட்டத்தின் புணானையில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலை கழகத்தில் பெறுமதி வாய்ந்த கணினி பொருட்க்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தும் இலத்திரனியல் உதிரிப்பாகங்கள் போன்றவற்றை களவாடியமை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபள்யூ.எம்.சந்திரகுமார தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை பல்கலைகழகத்திற்குள் உள்ளே இருந்து வந்த வேனினை கடமையில் இருந்த பொலிசார் சோதனையிட்டபோது மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதுடன் பொருட்களை ஏற்றி வந்த வேனும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
மட்க்களப்பு பல்கலைக்கழகம் தற்போது 'கொவிட்' நோய் தடுப்பிற்கான சிகிச்சை நிலையமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. இவ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர்களே இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது மடிக்கணினிகள் மூன்று (03), மேசை விளக்குகள் -ஏழு (07) மற்றும் இலத்திரணியல் பொருட்க்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி பொருட்களை கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையினை குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஜ.பி. எதிரிசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொருட்க்கள், மற்றும் வாகனம் போன்றவற்றை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment