எதிர்வரும் 21 ஆம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள நிலையில், மினுவாங்கொடை கல்வி வலயத்தில் உள்ள 21 பாடசாலைகளை, எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை கல்வி வலயக் காரியாலயம் தெரிவித்துள்ளது.
தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளைக் கொண்ட 200 மாணவர்களுக்குட்பட்ட சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூல 21 பாடசாலைகளையே இவ்வாறு திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை கல்வி வலயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலைகளைத் திறப்பதற்கு முன்னர், 19 ஆம் 20 ஆம் திகதிகளில் பாடசாலை வளாகம் முழுமையாகத் துப்புறவு செய்யப்பட்டு, தொற்று நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் சுகாதார அமைச்சின் வழி காட்டல்களுக்கு அமைய, குறித்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment