நிந்தவூர் மருத்துவமனையில் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்.



நூருல் ஹுதா உமர்-
நிந்தவூர் ஆதார மருத்துவமனையில் கடமையாற்றும் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடமை பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்ததுடன், மருத்துவமனை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.
நாடு முழுவதும் உள்ள சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் ஒண்றிணைந்து முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (27) காலை 7 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், மதியம் 12 முதல் 12.15 வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சுகாதார ஊழியர்களின் பல்வேறு விடயங்களை எழுதியிருந்த சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :