ஏறாவூர் பிரதேசத்தில் திடீர் திடீரென மின்விநியோகம் துண்டிக்கப்படுவது தொடர்பாக மனு!



சாதீக் அகமட்- 
றாவூர் பிரதேசத்தில் தொடர்ச்சியாக  திடீர் திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்படுவது தொடர்பாக; அதனை ஆராய்ந்து தீர்வை பெற்றுத்தருமாறு கோரி, இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதி பொது முகாமையாளர்,Eng.S.Alagoda அவர்களின் கவனத்துக்கு ஏறாவூர் சமூக நல சேவை அமைப்பினரால்
மனு ஒன்று கொண்டு செல்லப்பட்டது.

இம்மனுவை கையளிக்கும் நிகழ்வில், அவ்வமைப்பின் தலைவர், முஹம்மத் அஹ்மத், இணைப்பாளர், நவாஸ் தாவூத் உட்பட, பிரதி செயலாளர் முஹம்மத் ரஸீம் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.
 மனுவை,Eng. Aneedha (Valaichanai CEB ) பெற்றுக்கொண்டார்.

அண்மைக்காலமாக ஏறாவூர் பிரதேசத்தில் தொடர்ச்சியாக அவ்வப்போது மின் துண்டிக்கப்படுவது காரணமாக மின்பாவனையாளராகிய பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சிறு தொழில் முயட்சியாளர்கள் உட்பட , இணையவழிக் கற்றலில் ஈடுபட்டுள்ள பாடசாலை மாணவர்களும் இத்தொடர்ச்சியான மின் துண்டிப்பினால் பல்வேறு வகையான அசெளகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அத்துடன், முன் அறிவித்தல் எதுவுமின்றி குறுகிய நேரத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதால் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பாவனையில் உள்ள மின்சாதனப் பொருட்களுக்கும் பழுதுக்கு உள்ளாகுவதுடன் பாவனைக்கு உதவாத நிலைமையும் ஏற்படுகிறது.
பொதுமக்களின் இச்சிரமத்தை கருத்தில் கொண்டு, இதற்கு முன்னரும்   இது தொடர்பாக,ஏறாவூர் நகரசபை, ஏறாவூர் பிரதேச செயலகம், மற்றும் ஏறாவூர் சம்மேளன சபை ஊடாக ஏறாவூர் மின்சார சபைக்கு இப்பிரச்சினையை கொண்டு சென்றிருந்தும்,
எந்தவொரு முன்னேற்றமும் காணப்படவில்லை

அதன் அடிப்படையி்ல் எமது அடுத்த கட்ட நகர்வாக இன்று இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளருக்கு மனு ஒன்று கையளிக்கப்பட்டது. அந்த வகையில்  இம்மனுவை பரிசீலனைக்கு எடுத்து உரிய தீ்ர்வை பெற்றுத்தருவதாக, கிழக்கு மாகாண இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் அலகொட நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :