தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு லிந்துலை என்போல் - சென்ரேகூலஸ் தோட்டத்தில் அமைந்துள்ள வினோதயம் அறநெறி பாடசாலை கட்டிடம் புதிதாக புனரமைப்பு செய்யப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் தனிப்பட்ட நிதிதியில் இந்த கட்டிடம் புனரமைப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமர் , பிரதேசசபை உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment