ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகள்: ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு நியமனம்



சிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு நியமனமிக்கப்பட்டுள்ளது.

நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்படட தீர்மானம் பின்வருமாறு:

01. ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவை நியமித்தல்
ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகள் பற்றி மேலெழுந்துள்ள நிலைமைகள் தொடர்பாக அமைச்சரவை விரிவாகக் கலந்துரையாடியுள்ளது. அதற்கமைய, இவ்விடயத்திற்குரிய அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு இப்பிரச்சினை தொடர்பாக மேலதிக விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக

கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்களை உள்ளடக்கியதான அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
• கௌரவ டளஸ் அழஹப்பெரும அவர்கள்
மின்சக்தி அமைச்சர்
• கௌரவ விமல் வீரவங்ச அவர்கள்
கைத்தொழில் அமைச்சர்
• கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள்
சுற்றாடல் அமைச்சர்
• கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள்
சுற்றுலாத்துறை அமைச்சர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :