கொரோனாவுக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் பலி!



வி.ரி.சகாதேவராஜா-
ம்மாந்துறை வலயத்திலுள்ள இறக்காமக்கோட்டத்தின் முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.எல்.எ.மஜீட்(70) கொரோனாத் தொற்றுக்காரணமாக நேற்று மரணமானார்.
சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோhனத்தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அங்குள்ள கொரோனவிசேடபிரிவில் சிகிச்சைபெற்றுவந்தார்.

அந்நிலையில் அவர் நேற்று காலமானார்.

இறக்காமத்தைச்சேர்ந்த மஜீட் இறக்காமம் பெரியபள்ளிவாசல் தலைவராகவும் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தலைவராகவும் இருந்து சமயசேவையாற்றியதுடன் மேலும் பொதுநலசேவையாற்றியும் வந்திருந்தார்.

அவரது இழப்பையிட்டு சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் உள்ளிட்ட கல்விசார் கல்விசாரா அணியினர் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்கள்.
அன்னார் சிபானா அர்சாத் ஆசிக் ஆகியோரின் தந்தையும் நீதவான் அஸ்வர் (அவுஸ்ரேலியா) அவர்களின் மாமனாரும் ஆவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :