சம்பள முரண்பாட்டிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி யாழில் வாகனப் பேரணி



யாழ் லக்சன்-
லங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலவசக் கல்விக்கான நெருக்கடி மற்றும் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வை பெறும் வகையில் தொழிற்சங்கப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டப வாயிலில் இருந்து யாழ் கச்சேரி வரையான வாகனப் பேரணியை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்கு வலுச் சேர்ப்பதற்கு அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது பங்களிப்பை வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :