நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் காணப்படும் ஓட்டமாவடி – ரஹ்மத் நகர் வீதிகள்; பிரதேச சபை கவனம் செலுத்த வேண்டுமென்று மக்கள் எதிர்பார்ப்பு!



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட நாவலடி - ரஹ்மத் நகர் பகுதியிலுள்ள பல வீதிகள் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மழைநீர் அடித்துச் செல்லப்பட்டதால் குறித்த வீதிகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.

புனர்நிர்மாணம் செய்யப்படாமல் நீண்ட காலமாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்படும் அவ் வீதிகளை பயன்படுத்துவோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், குறித்த வீதிகளிலுள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பல வருடங்களாக பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.

இதன் காரணமாக இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்காக வேண்டி பயணிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அத்துடன் வேறு பிரதேசங்களில் இருந்து வருவோர் குறித்த வீதிகளின் குழிகளில் விழுந்து செல்கின்றனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகத்தினர் கவனமெடுத்து குறித்த வீதிகளை புனர்நிர்மாணம் செய்து மின் விளக்குகளை பொருத்தித் தருமாறு அப் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :