திருகோணமலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருக்கும் பொது மக்களுக்கு வழங்குவதற்காக முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் இரண்டாயிரம் முகக்கவசங்கள் கையளிப்பு.



எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருக்கும் பொது மக்களுக்கு வழங்குவதற்காக முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் இரண்டாயிரம் முகக்கவசங்கள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிக்கோரலவிடம் அலுவலகத்தில் வைத்து இன்று(27) வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது மக்களுக்கு வழங்குவதற்காக முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் அதிகாரியான முகம்மட் சலிம் அரசாங்க அதிபரிடம் வழங்கி வைத்தார்.
இதில் முஸ்லிம் எயிட் வெளிக்கள அதிகாரி ஏ.எம்.ரமீஸிம் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :