சென்கூம்ஸ் தோட்டப்பகுதியில் 66 பேருக்கு கொரோனா



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
லிந்துலை பொது சுகாதர வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையம், சென்கூம்ஸ் தோட்டம் மற்றும் லெமலியா தோட்டப்பகுதிகளிலே 66 பேருக்கு தொற்று உறுதியானது.

கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட 49 தொற்றாளர்களுடன் தொடபினை பேணிய 220 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே சென்கூம்ஸ் தோட்டத்தில் 56 பேர், தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 06 பேர் மற்றும் லெமலியா தோட்டத்தில் 04 பேர் என 66 பேருக்கு தொற்று உறுதியானதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொற்றுக்குள்ளானவர்களை சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் கடந்த 14 நாட்களில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :