கிண்ணியா ஆயிலியடி - 4ம் வாய்க்கல் - முள்ளிப்பொத்தானை வீதிப் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கை.



எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் ஆயிலியடி - 4ம் வாய்க்கால் - முள்ளிப்பொத்தானை வீதியினை புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினாரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தௌபீக்கின் ஏற்பாட்டில் சுமார் 7 கிலோ மீற்றர் வீதி புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

ஆயீலியடி -நான்காம் வாய்க்கால் மற்றும் முள்ளிப்பொத்தானை வீதியினை புனரமைப்பு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களுடன் பொறியியலாளர் குழுவினர் இன்று(27) பார்வையிட்டு மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு,வீதி தொடர்பான மேலதிக தகவல்களையும் பொறியியலாளர் குழுவினர் கேட்டறிந்து கொண்டார்கள்.
ஆயிலியடி -நான்காம் வாய்க்கால் மற்றும் முள்ளிப்பொத்தானை புனரமைப்பு செய்யும் பட்சத்தில் முள்ளிப்பொத்தானை கந்தளாய் மற்றும் வான்எல,கிண்ணியா மக்களின் போக்குவரத்து மிகவும் இலேசாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :