ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் 'சௌபாக்கியத்தின் நோக்கு' திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்கான பொலிஸ் நிலையம் கடற்கரை வீதியில் வெள்ளியன்று கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது.
இப்புதிய பொலிஸ்நிலையம் காரைதீவு மாளிகைக்காடு சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களை நிருவகிக்கக்கூடியவாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதுவரைகாலமும் காரைதீவு நிந்தவூர் ஆகிய பெரும்பிரதேச ங்கள் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவில் உள்ளடங்கியிருந்தன. விரைவில் நிந்தவூர் பிரதேசத்திற்கும் தனியான பொலிஸ்நிலையம் அமையவிருப்பதாகக்கூறப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் பிராந்திய பொலிஸ் உயரதிகாரிகள் பிரதேச செயலாளர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பிரதம பொலிஸ் பரிசோதகர்கள்இ பள்ளிவாசல்களின் தலைவர்கள் ஆலய பரிபாலன சபையினர் மதகுருமார்கள் கிராம சேவகர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்து பௌத்த இஸ்லாமிய மதகுருமார்களின் ஆசியுடன் இந்த பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் நினைவாக அதிதிகளினால் மரக்கன்றுகள் நடப்பட்டன. கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா பொலிஸ்நிலைய குறிப்பேட்டிலும் கையெழுத்திட்டார் .
.

0 comments :
Post a Comment