18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை


மினுவாங்கொடை நிருபர் -

18 வயதுக்குக் குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசி
செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடும்போது, மாணவர்களுக்கு கொவிட் - 19 தடுப்பூசிகளைச் செலுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில், சுகாதாரத்துறையின் விசேட நிபுணர்களுடன் இணைந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, ஜப்பானிலிருந்து நன்கொடையாகக் கிடைக்கவுள்ள 14 இலட்சத்து 70 ஆயிரம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள், அடுத்தவாரமளவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :