தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவிலும் 5000 ரூபா கொடுப்பனவு மும்முரம்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை கொவிட்19 நிலையை கருத்திற் கொண்டு அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமாக 5000 ரூபா வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் ஊடாகவும் குறித்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறது இன்று (03)சிராஜ் நகர் கிராம சேவகர் பிரிவில் 5000 ரூபா வழங்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலில் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய நாள் கொடுப்பனவின் போது தம்பலகாமம் பிரதேச செயலக சமுர்த்தி வங்கி பிரிவின் தலைமை முகாமையாளர் முஸம்மிலா ராபிக் மற்றும் சமுர்த்தி வங்கி முகாமையாளர் முயிஸ் உள்ளிட்டோரால் கலந்து கொண்டு வழங்கப்பட்டது. சமுர்த்தி பெறும் குடும்பங்கள்,காத்திருப்பு பட்டியல் முதியோர் பொதுசன மாதாந்த கொடுப்பனவு என திட்டமிடப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா அசாதாரண சூழ் நிலை காரணமாக நாடு முடக்கப்பட்ட நிலையில் இவ்வாறான கொடுப்பனவினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

குறித்த கொடுப்பனவு நிகழ்வில் சிராஜ் நகர் கிராம சேவகர் முனாஸ்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் றபீக்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரிம்சாத் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :