சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் உள்ளிட்ட குழுவினரை சிறப்பு வாகனத் தொடரணியில் சென்றபோது அதற்கான வீதிகளை பொலிஸார் மூடியமைக்கு எதிராக செயற்பட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பத்தரமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவுஸ்திரேலியாவில் கடந்த பல வருடங்களாக அவர் தொழில் புரிந்துவந்தவர் எனக் கூறப்படுகின்றது.
குறித்த நேரத்தில் பொலிசார் வாகனங்களை இடைநிறுத்தியதால் தாம் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக ஏனைய வாகன சாரதிகள் வாய்மொழி மூலம் கூறுவதாக,சந்தேக நபரினால் எடுக்கப்பட்ட காணொளியொன்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
31 வயதுடைய நபர் நேற்று இரவில் பொறளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதுடன், இன்று நீதிமன்றிலும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்
0 comments :
Post a Comment