'கருப்பு ஞாயிறு' அனுஸ்டிப்புக்கு தொழிலாளர் தேசிய சங்கம் முழு ஆதரவு



லங்கையில் 2019 ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற மிகவும் கொடூரமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் நேரடி தொடர்புடைய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வலியுறுத்தி கத்தோலிக்க சபை அறிவித்துள்ள 'கருப்பு ஞாயிறு' அனுஸ்டிப்புக்கு தொழிலாளர் தேசிய சங்கம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்பில் சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கை வருமாறு,

"இலங்கையில் சுமார் 250ற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொழிலாளர் தேசிய சங்கம் வன்மையாக கண்டித்து வந்திருக்கிறது. இந்த தாக்குதலில் மலையகத்தைச் சேர்ந்த உறவுகளும் பலியாகினர். தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் நிச்சயம் கண்டறியப்பட வேண்டும். எனினும் அந்த எதிர்பார்ப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முழுமையாக ஈடுசெய்யப்படவில்லை.

விசாரணை அறிக்கையில் திருப்தி இல்லை என பல தரப்பினரும் அறிவித்துள்ளனர். எமது நிலைப்பாடும் அதுவே. இந்த கொடூர தாக்குதலின் பின்னணியில் இருந்து செயற்பட்ட சூத்திரதாரிகள் நிச்சயம் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதனை வலியுறுத்தி கத்தோலிக்க சபை அறிவித்துள்ள கருப்பு ஞாயிறு அறிவிப்பை நியாயமான ஒன்றாக நாம் கருதுகிறோம். அதனால் தொழிலாளர் தேசிய சங்கம் என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பிற்கு முழு ஆதரவையும் தெரிவிக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதோடு தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம்."

மயில்வாகனம் உதயகுமார் - பா.உ
பிரதித் தலைவர் - தொழிலாளர் தேசிய சங்கம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :