ஆழ்கடலில் திருட்டு; மீனவர்கள் கவலை...

எச்.எம்.எம்.பர்ஸான்-

ட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் வலைகள் ஆழ்கடலில் வைத்துத் திருடப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாம் மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்று வலைகளை வைத்து விட்டு வேறு திசையில் நிற்கும் போது, சிறிய படகில் வருவோர் தங்களின் வலைகளை அறுத்துச் செல்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான திருட்டு சம்பவங்கள் சுமார் 3 மாதங்களாக இடம்பெறுவதாகவும், இத்திருட்டைத் தடுக்க தாம் முயற்சிகளை மேற்கொள்ளும் போதும், படகில் வருவோர் தப்பிச் செல்வதாகவும் மீனவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

கடற்றொழில் வாழ்வாதாரத்தை நம்பி வாழும் எங்களது பெருமதியான வலைகளை அறுத்துச் செல்வதால் தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி வருகிறோம் எனவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் தாம் மீனவ சங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் தொடராமல் சுதந்திரமாக தொழில் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :