பாடல் எழுதும் போட்டி முடிவுகள் வெளிவந்தன



லைநகரில் கலை, இலக்கிய, சமூக பணிகளில் புதுத்தடம் பதித்தவரும் புதிய அலை கலை வட்டம் இவ்வாண்டினில் மாதந்தோறும் கலை.கலாசாரப்போட்டிகளை நடத்தி படைப்பாளிகளுக்கு ஊக்கமளித்து வருகின்றது. இந்த வகையில் மார்ச் மாதத்துக்கான போட்டியாக பாடல் எழுதும் போட்டியை நடத்தியது.
நாடாளாவிய ரீதியில் வயது கட்டுப்பாடின்றி நடத்தப்பட்ட இப்போட்டியில் 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் முதல்சுற்றில் 15பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களில் முதலாம் இடத்தை ஹட்டனைச் சேர்ந்த மாரிமுத்து சிவகுமாரும் இரண்டாம் இடத்தை கல்கிசையைச் சேர்ந்த றிம்ஷா முகம்மதுவும் மூன்றாம் பரிசை கொழும்பைச் சேர்ந்த தெரேசா இந்திராணியும் பெற்றுக் கொள்ள வுள்ளனர்.
இவர்களுக்கான பரிசளிப்புவிழா எதிர்வரும் 28.03.2021ஆம் திகதி ஞாயிறன்று கதிரேசன் வீதி. கொழும்பு -11 இல் அமைந்துள்ள ஸ்ரீ கதிரேசன் மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
முன்னாள் உதவி பொலிஸ் மா அதிபர் கே. அரசரட்ணம் தலைமையில் நடை பெறும் இந்நிகழ்வினில், பிரதம அதிதியாக புரவலர் புத்தகப் பூங்க நிறுவனர் ஹாசிம் உமர், மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தப் போட்டித்தொடரின் எதிர்வரும் மாதங்களுக்கான நிகழ்வுகளாக ஏப்ரல் மாதத்தில் கட்டுரை எழுதும் போட்டியும் மே மாதத்தில் குறுநாடகம்(30 நிமிடப்;) பிரதி எழுதும் போட்டியும் ஜூன் மாதத்தில் நெடு நாடகம்(ஒரு மணி) பிரதி எழுதும் போட்டியும் நடைபெறவுள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் இப்போதே தம்மை தயார்ப டுத்திக் கொள்ள முடியும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :