அரச அலுவலகர்களுக்கான சிங்கள மொழி வகுப்புகள் மீண்டும் ஆரம்பம்.


றாசிக் நபாயிஸ், மருதமுனை-

ரச கரும மொழிகள் திணைக்களத்தினால்
2007, 26ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டு அரச அலுவலகர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழியைக் கற்கைநெறிகள் அரசாங்க சுற்றறிக்கைகளுக்கமைவாக தமிழ் பேசும் அரச அலுவலகர்களுக்கு சிங்களமொழி பாடநெறியும், சிங்கள மொழி பேசும் அரச அலுவலகர்களுக்கு தமிழ் மொழி பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இவ்வாறான பாடநெறிகள் அம்பாறை மாவட்டத்திற்கான பல அலுவலகங்களிலும் திணைக்களங்களிலும் நடைபெற்று வரும் நிலையில் இன்று (2021/03/06)
இதற்கான ஆரம்ப நிகழ்வு
நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸானின் நெறிப்படுத்தலில்
கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நாட்டின் நிர்வாகத்துறையினைச் சிறப்பாக முன்னெடுக்கும் வகையிலும், சகல இன மக்களிடத்திலும் மொழி வழியிலான சமாதானம், ஐக்கியம், இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வகையிலும் அரச உத்தியோகத்தர்களை இரு மொழிப்பயன்பாட்டிற்கு தேர்ச்சி பெறச்செய்யும் நோக்கில் தமிழ் பேசும் அரச ஊழியர்களுக்கு சிங்களமொழி பாடநெறியும், சிங்களமொழி பேசும் அரச ஊழியர்களுக்கு தமிழ்மொழி பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இப்பயிற்சி நெறிக்கு வளவாளராக
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட பி.சந்திர குமாரி
கலந்து கொண்டு பாடநெறிகளை ஆரம்பித்து வைத்தார். இதில்
அலுவலகத்தில் கடமைபுரியும் பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என
பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :