தேசிய மகிழ்ச்சி தினம் கிழக்கு மாகாணத்தில் நடாத்த சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளரினால் ஏற்பாடு



பைஷல் இஸ்மாயில்-
லகிலுள்ள அனைத்து மனிதர்களினதும் நோக்கமாக இருப்பது தங்களின் வாழ்நாள் முழுவதும் மன மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதேயாகும். அதற்கமைவாக, 'தேசிய மகிழ்ச்சி தினம்' பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி தேசிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதனை கொண்டாடும் முகமாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மகிழ்ச்சி தினம் இம்மாதம் 20 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு திருகோணமலை தள ஆயுர்வேத வைத்தியசாலை கூட்ட மண்டத்தில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். மேலும் கௌரவ அதிதிகளாக மாகாண பிரதம செயலாளர் துஷித பீ.வணிகசிங்க, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி. ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :