அட்டன் ஸ்டெடன் தோட்ட தேயிலை மலையில் ஆணின் சடலம் மீட்பு



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டெடன் தோட்ட தேயிலை மலைப்பகுதியில் ஆணின் சடலமொன்று 05/02/2021 மதியம் மீட்கப்பட்டுள்ளது.

ரொசல்ல ரயில் நிலையத்தை அன்மித்த பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் சடலமொன்று இருப்பதை கண்டு அட்டன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமையவே பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
மாநிறம் ( Brown) சேர்ட்டும் வெள்ளை நிறம் சாரமும் அணிந்திருந்த உருகுலைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் இதுவரையில் யாரென அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :