இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி லண்டனில் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று(5) வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்திலும் சுழற்சிமுறை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பமானது.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனையைடுத்துள்ள பாண்டிருப்பு திரௌபதைஅம்மன் ஆலய முன்றலில் நேற்று(5) ஆரம்பித்த இச்சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி பி2பி அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பிரதீபன் அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி செல்வராணி உட்பட பலர் பங்குபற்றியுள்ளனர்.
லண்டன் அம்பிகா செல்வகுமார் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும்வகையில் அம்பாறை மாவட்டத்தில் உண்ணாவிரதத்தையும் பேரணியையும் நடாத்தலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பொத்துவில் நீதிவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட கல்முனைமாநகரசபைஉறுப்பினர் ராஜன் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி பி2பி அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பிரதீபன் அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி செல்வராணி அகியோரும் இப்போராட்டத்தில் குதித்துள்ளனர்;
.
பொத்துவில் நீதிவான் நீதிமன்றம் கடந்த 3ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 07ஆம் திகதி வரை இந்தத்தடையுத்தரவைப் பிறப்பித்திருந்ததமை தெரிந்ததே.
இதுஇவ்வாறிருக்க நல்லூரிலும் மட்டக்களப்பிலும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்து 3வதுநாளாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment