கொரோனா ஜனாஸாக்கள் சற்று முன்னர் இராணுவ பாதுகாப்புடன் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன..


கொ
ரோனா தொற்றினால் மரணித்துள்ள முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள நிலையில் அதன் ஏற்பாடுகள் இடம்பெற்றன.

கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை, மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் கிராமத்தில்  தெரிவு செய்யப்பட்ட காணியில் இன்று மதியம் 02 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்திற்கமைய இவ்வேற்பாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் ஓட்டமாவடி - மஜ்மா நகர் காணியில் முதற் காட்டமாக பத்து குழிகள் தோண்டப்பட்டதுடன் அதில் இருவரின் ஜனாஸாக்களே இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டதுடன் மீதமுள்ள ஜனாஸாக்களும் அடக்கம் செய்யப்படும் என்று எமது செய்தியாளர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :