வாகனத்திருட்டு அதிகரிப்பு- மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

J.f.காமிலா பேகம்-

வாடகைக்கு பெற்றுக்கொள்ளும் வாகனங்களுக்கு, போலி ஆவணங்களை தயாரித்து, வாகனங்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களை மேல் மாகாண புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

முல்லேரியாவ மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் மேலும் 17 குற்றச் செயல்களுடன் தொடர்புப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, மாத்தறை, அநுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் மூன்று மோட்டார் சைக்கிள் கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தங்காலை பகுதியில் முச்சக்கரவண்டியொன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகனங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :