இணையம் ஊடாக அடையாள அட்டை தரவுகள் உறுதிப்படுத்தும் விசேட திட்டம்

M.I.M.இர்ஷாத்-

தேசிய அடையாள அட்டை தரவுகளை இணையமூடாக உறுதிப்படுத்தும் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் ஆகியவற்றின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு குறித்த செயற்திட்டம் பயனுள்ளதாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வாடிக்கையாளர்களின் இணக்கப்பாட்டுடன் மாத்திரமே குறித்த சேவையினை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும், ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனிநபர் ஒருவரின் தரவுகளை உறுதிப்படுத்துவதற்கு குறித்த நடவடிக்கை பயனுள்ளதாக அமையும் என ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :