ஏறாவூர் நிருபர்-நாஸர்-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கல்விக் கோட்டத்திலுள்ள டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முப்பெரும் விழா இன்று 15.02.2021 கோலாகலமாக நடைபெற்றது.
தரம்- 1 வகுப்பிற்கு புதிய மாணவர்களை அனுமதித்தல் ää மரக்கன்றுகள் நடுதல் மற்றும் விநியோகம் ää இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் வகுப்பிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வலயக்கல்விப்பணிப்பாளரை கௌரவித்து வாழ்த்துதல் ஆகிய மூன்று நிகழ்வுகள் இதன்போது நடைபெற்றன.
பாடசாலை அதிபர் எம்எம். ஜலால்தீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வலயக்கல்விப்பணிப்பளர் டாக்டர் உமர்மௌலானா பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.
வலயத்தின் சமாதானக் கல்வி இணைப்பாளர் எம்ஜிஏ நாஸர்ää விவசாயப் போதனாசிரியை முர்ஷிதா ஷிறீன் மற்றும் கலாநிதி ஏஜி. அப்துல் றகுமான் ஆகியோரும் இவ்விழாவில் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
மாணவச் சிறுவர்களது கலை நிகழ்ச்சிகளும் இங்கு அரங்கேற்றப்பட்டன.
பிரதம அதிதி உமர்மௌலானா தரம்- 1 வகுப்பிற்கு புதிதாக இணைக்கட்ட மாணவர்களது கைகளைப்பிடித்து சம்பிரதாயபூர்வமாக வரைதலை ஆரம்பித்தார்.
அத்துடன் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டதைடுத்து பாடசாலை வளாகத்தில் மரநடுகையும் நடைபெற்றது. இதேவேளை தரஉயர்வு பெற்ற டாக்டர் உமர்மௌலானா பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எச்எம். நியாஸ் இங்கு நன்றியுரை வழங்கினார்.
தரம்- 1 வகுப்பிற்கு புதிய மாணவர்களை அனுமதித்தல் ää மரக்கன்றுகள் நடுதல் மற்றும் விநியோகம் ää இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் வகுப்பிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வலயக்கல்விப்பணிப்பாளரை கௌரவித்து வாழ்த்துதல் ஆகிய மூன்று நிகழ்வுகள் இதன்போது நடைபெற்றன.
பாடசாலை அதிபர் எம்எம். ஜலால்தீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வலயக்கல்விப்பணிப்பளர் டாக்டர் உமர்மௌலானா பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.
வலயத்தின் சமாதானக் கல்வி இணைப்பாளர் எம்ஜிஏ நாஸர்ää விவசாயப் போதனாசிரியை முர்ஷிதா ஷிறீன் மற்றும் கலாநிதி ஏஜி. அப்துல் றகுமான் ஆகியோரும் இவ்விழாவில் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
மாணவச் சிறுவர்களது கலை நிகழ்ச்சிகளும் இங்கு அரங்கேற்றப்பட்டன.
பிரதம அதிதி உமர்மௌலானா தரம்- 1 வகுப்பிற்கு புதிதாக இணைக்கட்ட மாணவர்களது கைகளைப்பிடித்து சம்பிரதாயபூர்வமாக வரைதலை ஆரம்பித்தார்.
அத்துடன் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டதைடுத்து பாடசாலை வளாகத்தில் மரநடுகையும் நடைபெற்றது. இதேவேளை தரஉயர்வு பெற்ற டாக்டர் உமர்மௌலானா பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எச்எம். நியாஸ் இங்கு நன்றியுரை வழங்கினார்.
0 comments :
Post a Comment