அட்டாளைச்சேனை கோணாவத்தை அந்நூர் மஹாவித்தியாலயத்தில் இடம்பெற்ற முப்பெரும் விழா..!

ரம்- 1 வகுப்பிற்கு புதிய மாணவர்களை அனுமதித்தல், மரக்கன்றுகள் நடுதல், மற்றும் மரக்கன்றுகள் விநியோகித்தல் ஆகிய மூன்று நிகழ்வுகளே இன்று கோணாவத்தை அந்நூர் மஹாவித்தியாலயத்தில் இடம்பெற்றன.

இன்று காலை 09.மணிக்கு பாடசாலை அதிபர் ஏ.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற விழாவில் அதிதியாக பாடசாலை (PSI) மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எல்.ஜாபிர் (ISA) கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக ஆரம்ப பிரிவு வலயத்தலைவர் ஏ.முஸம்மில், பிரதி அதிபர் எம்.எச்.எம்.ரமீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவின் முதல் நிகழ்வாக முதலாம் வகுப்பிற்கு புதிதாக இணைக்கட்ட மாணவர்களது கைகளைப்பிடித்து சம்பிரதாயபூர்வமாக வரைதலை ஆரம்பித்து வைத்ததுடன், இரண்டாம் நிகழ்வாக மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டதைடுத்து மூன்றாம் நிகழ்வாக பாடசாலை வளாகத்தில் மரநடுகையும் நடைபெற்றது.

குறித்த இன்றைய நிகவில் ஆசிரியர்கள், SDEC, OBA ஆகியவற்றின் உறுப்பினர்கள், பெற்றார் பாதுகாவலர்கள் என பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :