ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
கொழும்பு காலிமுகத் திடலுக்கு எதிரில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலான தாஜ் சமுத்திரா ஹோட்டலில் பணிபுரியும் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த தாஜ் சமுத்திரா ஹோட்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நான்கு ஊழியர்களுக்கும் வெளிப்படையான எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படவில்லை எனவும் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கம் வழங்கியுள்ள சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய தாஜ் சமுத்திரா ஹோட்டல் நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment