மற்றுமொரு நபர் கொழும்பில் வீதியில் வைத்து மரணம்


M.I.இர்ஷாத்-

கொழும்பு கல்கிசை பகுதியில் வீதியில் சென்ற நபர் திடீரென மரணமடைந்து விழுந்துள்ளார்.

பிரதேச வாசிகள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து கல்கிசை,தர்மபால வீதியை சேர்ந்த 80 வயது முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் உடலும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில இடங்களில் நேற்றும் இன்றும் இவ்வாறு வீதியில் மரணித்து விழுந்த நபர்கள் பற்றிய சம்பவம் அதிகரித்து வருகிற நிலையில், இதற்கும் கொரோனா வைரசிற்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :