நோட்டன் பிரிட்ஜ்எம்.கிருஸ்ணா-
ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை தோட்டபகுதியில் பன்றிக்கு வெடிவைத்து கொலை செய்த மூவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்
இந்த சம்பவம் 19.10.2020 திங்கள் கிழமை காலை இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
டிக்கோயா தரவளை பகுதியில் பன்றியினை வெடி வைத்து கொலை செய்து இறைச்சியினை விற்பனை செய்வதற்காக முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்று கொண்டிருந்த போதே பொலிஸார் சுற்றிவலைத்துள்ளனர்
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது டிக்கோயா மணிக்கவத்த பகுதியில் வைத்து மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யபட்டதோடு முச்சக்கர வண்டியிலிருந்த பன்றி இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்
குறித்த மூன்று சந்தேக நபர்களும் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த அட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்
https://we.tl/t-xywOTywQpr
7 Attachments
ReplyReply allForward
0 comments :
Post a Comment