இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜங்க அமைச்சர் கௌரவ #இந்திக #அனுருந்த அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ #காதர் #மஸ்தான் அவர்கள் நேற்று (08.09.2020) குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்.
கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறுபட்ட தேவைகளுடன் மிகவும் சிரமத்தோடு வாழ்ந்து வருகின்ற இந்த மக்கள் கடன் சுமைகளாலும் முறையான தொழில் வாய்ப்பின்றியும் கடும் சிரமப்படுவதையும், மழைக்காலங்களில் அப்பகுதி மக்கள் தமது வாழ்விடங்களில் வாழ முடியாத ஒரு அபாய நிலையில் வாழ்ந்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இராஜாங்க அமைச்சரிடம் தெளிவுபடுத்தினார். இதனடிப்படையில் அதனோடு தொடர்புபட்ட அனைத்து தகவல்களையும் தமக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் குறித்த பகுதிக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment