கல்முனை பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களை சேர்த்துக் கொள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பம்



சர்ஜுன் லாபீர்-
னாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் 50 ஆயிரம் பட்டதாரிகளை பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்திற்கமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 305 பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று 2020.09.01 ஆம் திகதி கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம். எம். நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளித்தார்.
இதன்போது கல்முனை பிரதேச செயலக கணக்காளர் அல்ஹாஜ். வை. ஹபீபுல்லாஹ் , உதவி திட்டமிடல் பணிப்பாளர். எம். ஜஹ்பர் , நிருவாக உத்தியோகத்தர், எம்.என்.எம் றம்ஸான் , நிருவாக கிராம சேவை உத்தியோகத்தர் , யூ. எல். பதியுதீன். அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் யாசீன் பாவா, கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :