வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தில் பீடை நோய் தாக்கத்திற்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு


எச்.எம்.எம்.பர்ஸான்-
பீடை நோய் காரணமாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட நிகழ்வொன்று இம்மாதம் 18ம் திகதி காலை 9 மணிக்கு வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் விவசாயிகள் எதிர்நோக்கும் பீடை நோய் பிரச்சினைகளை ஆராய்ச்சி செய்து தீர்வுகள் வழங்கப்படவுள்ளன.

இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் வருகை தரவுள்ள இந்நிகழ்வில் விவசாய செய்கையில் பீடை நோய் தாக்கம் உள்ள விவசாயிகள் தங்களின் மாதிரிகளுடன் அன்றைய தினம் வருகை தந்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு மட்டக்களப்பு விவசாய திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :