சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 60 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த மூவர் விளக்கமறியலில்


எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 60 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த மூவரை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.அன்பாஸ் இன்று(16) உத்தரவிட்டார்.
திருகோணமலை, மட்கோ,கூம்பூகார்,பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 21,30 மற்றும் 23 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இணைந்து திருகோணமலை கருமலையூற்று அண்டிய பகுதியில் 60 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை மூன்று சந்தேக நபர்களும் தலா இருபது மில்லிகிராம் வீதம் தம் வசம் வைத்திருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :