60% வாக்குப்பதிவு; பெட்டிகள் தயார்படுதலில்!



J.f.காமிலா பேகம்-

09ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பு இன்று மாலை 05 மணியுடன் முடிவுக்கு வந்தது. தற்சமயம் வாக்குப் பெட்டிகள் தயார்செய்யப்பட்டு வருவதோடு பொலிஸாரின் பாதுகாப்புடன் அவை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்படவுள்ளன.
நாடு முழுவதிலும் 60 சதவீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அந்தவகையில், இதுவரை வெளியான முடிவுகளின்படி யாழ்ப்பாணத்தில் 4 மணிவரை 64% வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதுடன்,
இரத்தினபுரி 70%, திருகோணமலை 69%, மாத்தளை 68%, கேகாலை 67%, கண்டி 65%, மொமானராகல 65%, கம்பஹா 62%, கொழும்பு 60%, களுத்துறை 60%, காலி 60%,புத்தளம் 60%, பொலநறுவை 55% வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன
12985 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப் பதிவுகள் நடைபெற்றன.
இன்று காலை 6 மணி தொடக்கம் நண்பகல் வரை சுமார் 421 தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து முறைப்பாடுகளும் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :