290 பேரை ஏற்றிய விசேட விமானம், துபாயிலிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்கா வந்தடைந்தது.

க்கிய அரபு இராச்சியத்தில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்ற நிலையில், உலகம் பூராகவும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், அந்நாட்டில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 290 பேரை ஏற்றிய விசேட விமானம், துபாயிலிருந்து இன்று (18) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

குறித்த விமானப் பயணிகள், துபாயிலிருந்து இன்று அதிகாலை 5.35 மணிக்கு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 226 எனும் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவ்விமானப் பயணிகள், சுகாதார அமைச்சுடன் இணைக்கப்பட்ட வைத்தியசாலை ஊழியர்களினால் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இப்பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை, அவர்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்டியுள்ள 04 ஹோட்டல்களில் தற்காலிகமாகத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -