ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் உள்ளக களஞ்சிய வலையமைப்பு மீது சைபர் தாக்குதல்

ஜே.எப்.காமிலா பேகம்-

லங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு வலையமைப்பிற்களில் முதன்மை வகிக்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் உள்ளக களஞ்சிய வலையமைப்பு மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ள இந்த சைபர் தாக்குதலை அடுத்து டெலிகொம் நிறுவன வாடிக்கையாளர் சேவை உட்பட பலதரப்பட்ட சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெலிகொம் நிறுவன ஊழியர்கள் பலர் வீட்டிலிருந்தே பணிசெய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், தனிப்பட்ட கணணிகளில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, சொட்நொகிப் என்கிற கப்பம் கோரும் இணைய மென்பொருளைப் பயன்படுத்தி இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -