தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் காணரமாக கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நோயாளிகளை பராமரிக்கும் கொழும்பு தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் (ஐ.டி.எச்.வைத்தியசாலையில்) கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சகல தரப்பு ஊழியர்களுக்கும் புனித நோன்பை முன்னிட்டு கோல்கேட் கேட்டரிங் உரிமையாளர் ஸப்ரி ஹாயின் உதவியுடன் தெஹிவல-கல்கிஸ்ஸ பவுண்டேசனின் ஏற்பாட்டில் இன்று மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 500 பார்சல்கள் மதிய உணவுகளை இன்று வைத்தியசாலையின் பணிப்பளார் ஹசித்த அத்தநாயக்க உள்ளிட்ட வைத்தியக் குழுக்களிடம் தெஹிவல-கல்கிஸ்ஸ பவுண்டேசனின் தலைவர் பெரோஸ் லத்தீப், சட்டத்தரணி ரமீஸ் டொக்கடர் அஸாத் மற்றும் கோல்கேட் கேட்டரிங் உரிமையாளர் ஸப்ரி ஹாஜி ஆகியோர் வைத்தியசாலையில் வைத்து கையளித்தனர்.