அம்பாறை மாவட்ட செயலக வளாகத்தில் தோட்டம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அஸ்ஹர் இப்றாஹிம்-
தி மேதகு ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஸ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள பத்து இலட்சம் வீட்டுத் தோட்டத்தினை உருவாக்கும் 'சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்' அமைக்கும் பணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களில் இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னோடியாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் டீ.எம்.எல்.பண்டாரநாயகவின் பணப்புரையின் பேரில் மாவட்ட செயலக வளாகத்தில் தோட்டம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதில் மாவட்ட செயலக உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தமது வழமையான பொது மக்கள் சேவைக்கு மேலதிகமாக தோட்டம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்னர்.
2 ஹெக்டேயருக்கும் அதிகமான மாவட்ட செயலக வளாகத்தில் செயற்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு தேவையான தொழிற்நுட்ப உதவிகளையும் பயிர் விதைளையும் , மரக்கன்றுகளையும் விவசாய திணைக்களம் வழங்கி வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -