புல்மோட்டை அரிசி மலை கடற்கரை பகுதியில் விசேட சிரமதானப் பணி.


எப்.முபாரக்-
குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாரக் அவர்களின் ஏற்பாட்டில் குச்சவெளி பிரதேச சபையின் புல்மோட்டை உப அலுவலக ஊழியர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரி உள்ளடங்கிய குழுவினரால் சுற்றுலாபயணிகள் மற்றும் உள்ளூர் மக்களும் அதிகம் விரும்பும் கடற்கரையான புல்மோட்டை அரிசி மலை கடற்கரைப் பகுதியினை சிரமதான பணி மூலம் இன்று(29) துப்புரவு செய்தனர்.
இதன் போது அரிசி மலை விகாராதிபதி யின் விசேட அழைப்பையேற்று விகாரைக்கு சென்ற குச்சவெளி தவிசாளர் அங்கு இருந்த பௌத்த மதகுருமார்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
இதன் போது அரிசி மலைக்கு செல்லும் வீதியினை செப்பனிட்டு தருமாறு பௌத்த மதகுருமாறால் தவிசாளரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது அதற்கான ஏற்பாடுகளை மிக அவசரமாக செய்வதாக தவிசாளர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த சிரமதான வேலையை மேற்கொண்ட குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினருக்கு மதகுருமார்களால் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -