இலங்கையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத் அரசாங்கம் அமுல்படுத்திய ஊரடங்குச் சட்டம் நாடளாவிய ரீதியில் இன்றுவ்தளர்த்தப்பட்டபோது மக்களின் இயல்பு வாழ்க்கை வளமைக்குத் திரும்பியதை அவதானிக் முடிந்தது. இந்த வகையில் தலை நகர் கொழும்பில் ஊரடங்குச் சட்டம் தொடராக அமுல்படுத்தியிருந்த நிலையில் சுமார் 66 நாட்களுக்குப் பின்னர் இன்று அகற்றப்பட்டது.
இன்று தமது அலுவலகக் கடமைகளுக்கு வருகை தந்த அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் புகையிரதத்தில் சமுக இடைவெளியைப் பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்து பயணித்ததையும்இ புகையிர நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் விசேடமாக பொருத்தப்பட்டுள்ள தன்னியக்க உடல் வெப்பநிலையை அளவிடும் கருவியூடாக வெறியேற்றப்பட்டமையையும்இ புகையிர நிலையத்தில் விசேட பொலிஸ் பாதுகாப்புக்கள் போடப்பட்டிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.