ஓட்டமாவடி - மீராவோடை குடும்ப நல உத்தியோகத்தர் நிலையம் உடைக்கப்பட்டு TV திருட்டு!


எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் இயங்கும் மீராவோடை குடும்ப நல உத்தியோகத்தர் (கிளினிக் நிலையம்) உடைத்து அதிலிருந்த பெறுமதியான எல்.ஈ.டி தொலைக்காட்சிப் பெட்டி திருடப்பட்டுள்ள சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் கிளினிகுக்கு வரும் குழந்தைகளுக்கு சுகாதாரப் பழக்கவழக்கங்கள் தொடர்பான ஒளிப்பதிவுக் காட்சிகளை காண்பிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -